
மும்பை, ஜூன்-22 – குறட்டை விட்டு தூங்குவது மனித வாழ்வில் சகஜமான ஒன்றுதான்.
ஆனால் வேலையிடத்தில் அதுவும் ஓர் ஆசிரியைரே மாணவர்கள் முன்னிலையில் அப்படித் தூங்கினால்?
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள கிராம இடைநிலைப் பள்ளியில் தான் இந்த ‘கூத்து’ அரங்கேறியுள்ளது.
வகுப்பில் பாட நேரத்தின் போது சுமார் 15 முதல் 20 மாணவர்கள் முன்னிலையில் அந்த ஆண் ஆசிரியர் குறட்டை விட்டு தூங்கியுள்ளார்.
அதுவும் இரு கால்களையும் மேசை மீது போட்டுக் கொண்டு அரை மணி நேரங்களுக்கு அவர் ‘ஒய்யாரமாக’ தூங்கியுள்ளார்.
வீடியோ எடுத்த நபரின் குரல் கேட்டு பின்னர் விழித்துக் கொண்ட அவ்வாடவர், எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சர்வசாதாரணமாக நடந்துகொண்டார்.
இந்நிலையில் அவர் மீது புகார் செய்யப்பட்டு விசாரணைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் அரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தின் இலட்சணமும் இப்பட்டித் தான் ‘குறட்டையில் தூங்கி வழிவதாக’ வலைத்தளவாசிகள் முகம் சுளிக்கின்றனர்