
புத்ரா ஜெயா, மார்ச் 9 – மேற்காசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, RON95 மானிய விலை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தற்போது தனது சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எண்ணெய் விலைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டாலும், மக்கள் மீது சுமை ஏற்படாத வகையில் RON95 மானியம் குறைந்த விலையில் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், நாட்டில் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, அது இன்னும் கட்டுப்பாட்டில் இருந்தாலும் , இன்றைய எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு பிரெண்டின் (Brent) விலை 100 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
நாங்கள் இன்னும் 1 ரிங்கிட் 99 சென்னாக Budi95 ஐ வைத்திருக்கிறோம். மக்கள் மீது சுமையை ஏற்படுத்தாமல் இருக்க அதிகபட்ச முயற்சியை மேற்கொள்வோம்,” என அன்வார் கூறினார்.
இன்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பணியாளர்களுடனான சந்திப்பில் அவர் இத்தகவலை வெளிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி, அரசாங்க தலைமைச் செயலாளர் டன்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதனிடையே இஸ்ரேல் ஆட்சி மற்றும் அமெரிக்காவின் வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் மலேசியா ஆதரவளிப்பதாக மீண்டும் அன்வார் தெரிவித்தார்.
அதனால்தான், நாட்டைப் பாதுகாப்பதில் ஈரானுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்க ஈரானையும் நட்பு நாடுகளையும் தொடர்பு கொள்ளுமாறு அழைக்கப்படுபவர்களில் மலேசியாவும் இருப்பதாகவும் , இது நாட்டின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இருப்பதாக அவர் விவரித்தார்.



