Latestமலேசியா

லாபீசில் உயர வரம்பை ‘மறந்த’ ஓட்டுநர்; சுரங்கப்பாதையில் சிக்கிய லாரி

செகாமாட், மே-16 – சாலையில் வாகனங்களுக்கான உயரக் கட்டுப்பாட்டை மறந்துபோன ஓட்டுநரின் கவனக்குறைவால், ஜோகூர், லாபிஸ், ஜாலான் இப்ராஹிமில் லாரியொன்று சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டது.

புக்கிட் கெச்சேவாவில் நேற்று மாலை 4.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

20 வயது ஓட்டுநர் அப்போது லாபிஸிலிருந்து சிலாங்கூர் சென்றுக் கொண்டிருந்தார்.

சம்பவ இடம் நெருங்கியப் போது உயர வரம்பை அவர் ‘கவனிக்கவில்லை’

இதனால் 3 மீட்டர் உயர சுரங்கப் பாதையின் மேல்பகுதியை லாரி மோதி, அதன் தலைப் பகுதி பெரும் சேதமடைந்தது.

எனினும், ஓட்டுநருக்கு காயமேற்படவில்லை என செகாமாட் போலீஸ் கூறியது.

சாலை சமிக்ஞை குறியீடுகளைப் பின்பற்ற தவறியதன் பேரில் 1987-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!