Latestமலேசியா

மே 1, பத்துமலை திருத்தளத்தில் ‘கந்த சஷ்டி கவசம் பாராயணம்’; முருகருக்கு அபிசேகம் செய்ய இலவச பன்னீர்

கோலாலம்பூர், ஏப்ரல்-29, வரும் மே 1-ஆம் தேதி பத்து மலை திருத்தலத்தில் “கந்த சஷ்டி கவசம் பாராயணம்” எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஆதரவில், டத்தோ என். சிவகுமார் தலைமையிலான டி.எஸ்.கே குழுமமும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமாவும் இணைந்து அதனை நடத்துகின்றன.

140 அடி முருகன் சிலை அடிவாரத்தில் வியாழக்கிழமைக் காலை 8 மணிக்கு மங்கல வாத்தியங்கள் மற்றும் விநாயகர் வழிபாடோடு நிகழ்ச்சி தொடங்கும்.

ஆன்மிக சொற்பொழிவுகள், காவடி சிந்து ஆட்டம் முடிந்து சரியாக 8.30 மணிக்கு கந்த சஷ்டி பாராயணம் தொடங்கும்.

பின்னர் பக்தர்களுக்கு பன்னீர் வழங்குதல், மேற்குகையில் வேலாயுதப் பெருமானுக்கு அபிஷேகம், என தொடரும் நிகழ்வு காலை 10.30 மணிக்கு அன்னதானத்துடன் நிறைவுப் பெறும்.

கந்த சஷ்டி மகா மந்திரத்தின் இரகசியங்கள் என்ற தலைப்பில் குகாஸ்ரீ ஆர். விஜயகுமாரின் சொற்பொழிவும் உண்டு.

எனவே முருக பக்தர்கள் திரளாக வந்து அருள் பெற்றுச் செல்லுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!