
தோக்கியோ, மே 2- மேற்கு ஒசாகாவில் இன்று 7 தொடக்கப் பள்ளி மாணவர்கள் மீது வேண்டுமென்றே வாகனமேற்றி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாகனமோட்டியை போலீசார் கைது செய்துள்ளதாக, உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணையில், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியே, பள்ளிக் மாணவர்களை வாகனம் ஏற்றி கொல்ல தூண்டியதாக கைதான ஆடவன் கூறியுள்ளான்.
இவ்விபத்தில் எட்டு வயதுடைய 7 மாணவர்களில், 6 மாணவர்கள் சொற்ப காயங்களோடு உயிர் தப்பினர்.
அதில் ஒரு மாணவருக்குத் தாடை உடைந்து மிகவும் கடுமையான காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்குப் பின் மாணவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனிடையே, அனைவரும் தற்போது சீரான நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது