Latestமலேசியா

அசம்பாவிதங்களைத் தவிர்க்க பள்ளிகளில் ரகசியக் கேமராக்களைப் பொருத்த பேராக் மாநில அரசு திட்டம்

ஈப்போ, டிச 20 – பள்ளி வளாகத்தில் நிகழும் பல்வேறு அசம்பவங்களைப் பதிவுசெய்வதற்காகப் பேராக் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் CCTV எனப்படும் ரகசியக் கேமராக்களை பொருத்துவதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து மாநில அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் அஸ்லான் ஹெல்மி கூறினார்.

இதற்கான செலவு அதிகம் என்றாலும் பள்ளி வளாகங்களில் ரகசியக் கேமராக்களைப் பொருத்துவது நல்லதொரு திட்டமாகும் என்றும் இதன்வழி பள்ளி வளாகங்களில் நிகழ்ந்துவரும் எதிர்பாரா சம்பவங்களை நாம் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் போலீஸ்காரர் ஒருவரின் கார் மோதியதில் மரணமுற்ற 17 வயது மாணவன் முஹம்மது ஜஹாரிப் அஃபெண்டி முஹம்மது ஜம்ரியின் குடும்பத்தினரைச் சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!