
கோலாலம்பூர், ஏப்ரல்-22, மலேசிய சிறு நடுத்தரத் தொழில் சங்கமான SME Malaysia, ‘2025 SME அனைத்துலக நல்லெண்ண கோல்ப்ஃ போட்டியை’ ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டி வரும் ஜூன் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை சிலாங்கூரில் உள்ள புகழ்பெற்ற கோத்தா பெர்மாய் கோல்ஃப் & கன்ட்ரி கிளப்பில் நடைபெறும்.
தொடர்புத் துறை துணையமைச்சர் டத்தோ வில்சன் உகாக் அனாக் கும்போங் அதனை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.
இது வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களை ஒன்றிணைத்து, கோல்ஃப், வியூகத் தொடர்பு மற்றும் சமூகப் பொறுப்புடன் கூடிய மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் ஒரு சிறப்புமிக்க முழு நாள் நிகழ்வாகும்.
மலேசியா மற்றும் ஆசியான் வட்டாரத்தைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட முக்கிய தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களை இப்போட்டி ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வு இரட்டை நோக்கத்தைக் கொண்டதாகும்; அதாவது கிடைக்கும் பணத்தில் 50 விழுக்காடு தொகை, பின்தங்கிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை ஆதரிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்;
எஞ்சிய 50 விழுக்காடு தொகை, நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை ஆதரிக்கும் ஒரு பிரத்யேக முயற்சியான SME மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்கப்படும்.
நிறுவனங்களும் அமைப்புகளும் இந்நிகழ்வுக்கு நிதி ஆதரவு தர முன்வருமாறும் அழைக்கப்படுகின்றன.
இந்த SME நல்லெண்ண கோல்ஃப் போட்டியில் தனிநபர்களும் வர்த்தக குழுக்களும் பங்கேற்கலாம்.
வெற்றியாளர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள், கோப்பைகள் மற்றும் வெகுமதிகள் காத்திருக்கின்றன.
ஆர்வமுள்ளோர் மே 7-ஆம் தேதிக்குள் பதிந்துகொள்ள வேண்டும்; பதிவுக் கட்டணம் உண்டு.
https://forms.gle/DyLoxZc2Rrf8fFVo6 என்ற முகவரியில் பதிவுப் படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்