Latestமலேசியா

போலி அடையாளக் கார்டை 5,000 ரிங்கிட்வரை வாங்குவதற்கு முன்வரும் சட்டவிரோத குடியேறிகள்

கோலாலம்பூர், பிப் 20 – போலி அடையாளக் கார்டை   கூடுதல்  பணம் கொடுத்து வாங்குவதற்கு    சட்டவிரோத  குடியேறிகள் தயாராய்   இருக்கின்றனர். 

ஒரு போலி அடையாளக்  கார்டை  5,000 ரிங்கிட்வரை    விற்பனை செய்யும்   நடவடிக்கையில்    போலி அடையாளக் கார்டு விற்கும் கும்பல்  ஈடுபட்டு வருவது  தேசிய பதிவுத்துறையின் உளவு  தகவல் மூலம் தெரியவருவதாக  உள்துறை துணையமைச்சர்   டத்தோஸ்ரீ   சம்சுல்  அனுவார்  நஷரா   ( Shamsul Anuar  Nasarah )  தெரிவித்தார். 

போலி அடையாளக் கார்டுகளை  விற்கும்  அல்லது   அடையாள ஆவணங்களை  போலியாக்கும்   சேவையை இணையம் வாயிலாக  மேற்கொள்ளும்  நடவடிக்கைகளுக்கு எதிராக  தேசிய பதிவுத்துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக    இன்று காலையில்  நாடாளுமன்றத்தில் வாய்மொழி கேள்விக்கு பதில் அளித்தபோது  சம்சுல்  அனுவார்  கூறினார். 

 முகநூல், instagram,  Telegram,  மற்றும்  Tik Tok  போன்ற  சமூக வலைத்தளங்களில்  சட்டவிரோத நடவடிக்கைகள்  கண்காணிக்கப்பட்டு வருவகின்றன. 

வேலை தேடுவோர்  அல்லது சட்டவிரோதமாக  இந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகள்   போலி அடையாளக் கார்டுகளை பெறுவதில் ஆர்வம் காட்டுவதாக   சம்சுல்  கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!