Latestமலேசியா

அன்வார் ஒரு சிறந்த மலேசியாவை உருவாக்குகிறார்; 10 சான்றுகள்

கோலாலும்பூர், ஜூன் 23 – நமது நாட்டின் பிரதமர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின், நிர்வாக செயல்திறன் மற்றும் அணுகுமுறையின் அடிப்படையில், மக்கள் தொடர்ந்து அவரை ஆதரிக்கலாம் என்பதற்கு 10 காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பிரதமர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (MACC) முழு அதிகாரம் அளித்ததைத் தொடர்ந்து , அரசியல் அல்லது வணிக பிரமுகர்களுக்கு எதிரான விசாரணைகளில் தலையிடாமல் இருப்பது பாராட்டத்தக்க ஒன்றாகும்.

ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குதல், மடானி பொருளாதார கட்டமைப்பின் சீர்திருத்தம், மானியங்களை கட்டம் கட்டமாக பகுத்தறிவு செய்தல், குறைந்த வருமானம் பெரும் பொதுமக்களுக்கு முன்னுரிமை மற்றும் சர்வதேச அரங்கில் மலேசியாவை முன்னிலைப்படுத்தியது போன்ற புரட்சிகரமான செயலை அன்வார் தொடர்ந்து செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளில் அதிகரிப்பு, நிறுவன சீர்திருத்த உறுதிப்பாடு மற்றும் பட்டதாரி வேலையின்மை பிரச்சனையை நிவர்த்தி செய்வதிலும் அவர் மும்முரம் காட்டி வருவது சிறப்பான செயலாகும்.

இறுதியாக தேசிய ஒற்றுமை மற்றும் MADANI மதிப்புகளை வலுப்படுத்தி பல்லின மக்களுக்கு நடுநிலையான சேவையாற்றி வரும் பிரதமர் அன்வாருக்கு, மக்கள் தொடர்ந்து ஆதரவளிக்கலாம் என்று வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!