Latestமலேசியா

அமெரிக்கா நெருக்குதல் அளித்த போதிலும் ஐ.நா மாநாட்டில மலேசியா கலந்துகொள்ளும் -அன்வார்

கோலாலம்பூர் – ஜுன் 13 – அடுத்த வாரம் நடைபெறும் ஐ,நா மாநாட்டில் பல நாடுகள் கலந்துகொள்வதிலிருந்து தடுப்பதற்கு அமெரிக்கா நெருக்குதல் கொடுத்துவந்த போதிலும் அம்மாநாட்டில் மலேசியா கலந்துகொள்ளும். பாலஸ்தீன மக்களுக்கான நீதி குறித்த பிரச்சினையில், ஒவ்வொரு நாடும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த உரிமை உள்ளதால், மலேசியா அந்த மாநாட்டிற்கு ஒரு பிரதிநிதியை அனுப்பும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். பாலஸ்தீனம் மற்றும் காசா மக்களுக்கான நீதியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாடும் கலந்து கொள்ளவும் அதன் கருத்துக்களை வெளிப்படுத்தவும் உரிமை உண்டு. அதுதான் எங்கள் நிலைப்பாடு என அவர் கூறினார்.

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமட் பின் சால்மான மற்றும் பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron மேற்கொண்டுவரும் முயற்சியை தாம் ஆதரிப்பதாக அன்வார் தெரிவிதார். இன்று செராசில் Azzubair Ibn Awwan பள்ளிவாசலில் தொழுகையில் கலந்துகொண்டபின் அவர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜூன் 17முதல் 20 ஆம் தேதிவிரை நடைபெறும் இந்த மாநாட்டை பிரான்ஸ்சும் சவுவுதி அரேபியாவும் கூட்டாக ஏற்று நடத்துகின்றன. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ஒரு பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம் என்று அந்த மாநாட்டில Emmanuel Macron ஆலோசனை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!