
கோலாலம்பூர், ஜூன் 9 – தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil ) மற்றும் கூட்டரசு பிரதேச நிலம் மற்றும் சுரங்க இயக்குநர் ஜெனரல் அஸ்மி முகமது ஜைன் (Azmi Mohd Zain) உட்பட ஏழு பேர் மீது அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்னாள் கோலாலும்பூர் கோபுர நிர்வாகத்தினர் செய்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் அமைச்சரோ பிறரோ தலையிடும் செயல்களில் ஈடுபட்டதாக ‘ஹைட்ரோஷாப்’ மற்றும் மெனாரா கே.எல் நிறுவனத்தினர் நிரூபிக்க தவறியதாக நீதிமன்றம் கூறியது.
கடந்த 31 மே மாதத்தோடு ஹைட்றோஷாப் நிறுவனத்தின் குத்தகை காலம் முடிந்த பிறகு கோலாலம்பூர் கோபுர நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது.
ஹைட்ரோஷாப் நிறுவனம் அரசாங்கத்திற்கும் ‘LSH சர்வீஸ் மாஸ்டருக்கும்’ மொத்தமாக 65,000 ரிங்கிட் செலவுத்தொகையை செலுத்த வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஹைட்ரோஷாப்பின் வழக்கை ரத்து செய்யுமாறு அரசாங்கமும் LSH சர்வீஸ் மாஸ்டர் நிறுவனமும் செய்த விண்ணப்பத்தை ஜூலை 14ஆம் தேதி அன்று நீதிமன்றம் விசாரிக்கும்.