Latestமலேசியா

ஆற்றலும் அடைவுநிலையும் நிரூபிக்கப்பட்ட ரமணனுக்கே PKR உதவித் தலைவர் தேர்தலில் ஆதரவு; குணராஜ் அறிவிப்பு

சொந்தோசா, மே-15- பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் அதன் உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சராகவும், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராகவும், கட்சியின் துணைத் தகவல் பிரிவுத் தலைவராகவும் ரமணன் சிறந்த சேவையாற்றி வருகிறார்.

குறிப்பாக துணையமைச்சர் என்ற வகையில், இந்தியச் சமூகப் பொருளாதார முன்னேற்றங்களுக்கு எண்ணிலடங்கா திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தெக்குன் நேஷனல் கீழ் SPUMI, SPUMI Goes Big கடனுதவித் திட்டம், SME வங்கி வாயிலாக இந்தியத் தொழில்முனைவோருக்கு ‘வணிகம்’ கடனுதவித் திட்டம், பேங்க் ராக்யாட்டின் BRIEF-I கடனுதவித் திட்டம், SME Corp நிறுவனத்தின் கீழ் I-BAP திட்டம், பெண் தொழில்முனைவர்களுக்கான ‘பெண்’ திட்டம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவையெல்லாம் வெறும் நிதியுதவி அல்ல, மாறாக மலேசிய இந்தியர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிச் செய்யும் திட்டங்களாகும்.

குறிப்பாக மூன்றே மாதங்களில் 256 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை உட்படுத்திய 4 திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவையனைத்தும், மலேசியா மடானி தாரக மந்திரத்திற்கு ஏற்ப அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முன்னேற்றகரமான பொருளியல் மேம்பாட்டுத் திட்டங்களாகும்.

இந்தியச் சமூகத்தின் நாடித் துடிப்பையறிந்து செயல்படும் தலைவராக உருவாகியிருப்பதால், ஆளுங்கட்சியான PKRக்கும் அவரின் சேவை தேவையாகும்.

இந்தியச் சமூகத்தின் குரலாக அவர் விளங்குவதோடு, அனைத்து மலேசியர்களுக்குமான தலைவராகவும் அவரால் செயல்பட முடியும்.

இத்தனைச் சிறப்பான அடைவுநிலை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டிருக்கும் டத்தோ ஸ்ரீ ரமணன், 4 உதவித் தலைவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட மிகவும் தகுதியானவர்.

ரமணனின் ஆற்றலை கட்சித் தொண்டர்களும் பேராளர்களும் மனிதில் வைத்து அவரை பெருவாரியான வாக்குகளுடன் வெற்றிப் பெறச் செய்வர் என்றும் குணராஜ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!