இணையத்தில் பிரபலம் எனக் கூறி இலவசமாக் நாசி கண்டார் கேட்ட ‘influencer’; கேலிக்கு ஆளான சம்பவம்

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 24 –
வலைத்தளத்தில் ‘influencer’ என சொல்லப்படும் ஒருவர்,பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்திற்குச் சென்று, தான் ஒரு பிரபலம் எனவே இலவசமாக உணவு வேண்டும் என கேட்ட சம்பவம் வைரலாகி தற்போது கேலிக்கு ஆளாகியுள்ளது.
அச்சம்பவம் குறித்த தனது அனுபவத்தை அண்மையில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
தனது உணவகத்திற்கு, 40,000 ‘followers’ஐ கொண்ட பிரபலம் ஒருவர் குடும்பத்தோடு வருகை புரிந்ததோடு மட்டுமல்லாமல் தன்னை அணுகி தான் ஒரு டிக்டோக் பிரபலம் என்று கூறி, சாப்பிடுவதற்கு முன்பும் குடும்பத்துடன் உணவை உண்டுவிட்டு, பணத்தைக் கட்டும் சமயத்தி மொத்தம் 53.60 ரிங்கிட் எனக் கூறிய போதும் மீண்டும் தான் பணம் கட்ட வேண்டுமா என்ற கேட்டுள்ளார்.
அதற்கு அந்த உரிமையாளர், அனைத்து வாடிக்கையாளர்களையும் தங்கள் உணவகம் ஒரே மாதிரியாக நடத்துவதாகவும், பிரபலமாக இருந்தாலும், சாப்பிட்டால் பணம் கட்ட வேண்டுமென்று தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கின்றார்.
இதனிடையே இச்சம்பவத்தை தொடர்ந்து பிரபலம் என்றாலே அனைத்தையும் இலவசமாக கேட்கலாம் என்ற ஒரு சில வலைத்தள பிரபலங்களின் மனபோக்கை கண்டிக்கும் வகையில் சில உணவக உரிமையாளர்களும் சில சமூக ஊடக பிரபலங்களும் கேலியாக காணொளி செய்து வருகின்றனர்.



