Latestமலேசியா

இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் குதிரை கொம்பு; குமுறும் வலைதளவாசிகள்

கோலாலும்பூர், ஜூன் 5 – காலங்காலமாய் இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் குதிரை கொம்பாக உள்ள நிலையில், இப்போதும் அந்நிலை தொடர்வது பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றதென்று வலைதளத்தில் பெண் ஒருவர் பதிவேற்றிய காணொளிக்கு பல்வேறு கருத்து குவியல்கள் வந்த வண்ணமாக உள்ளன.

இந்தியர்களுக்கு வாடகை வீடுகள் கொடுக்க தயங்குவதற்கு, இந்தியர்கள்தான் காரணமே தவிர வேறு யாரும் இல்லை என்பதையும் காணொளியில் தெள்ள தெளிவாக கூறியுள்ளார் அப்பெண்.

வாடகையை சரிவர செலுத்தாதது, வாடகை வீடுகளை குண்டர் கும்பல் போன்ற தீச்செயல்களுக்கு பயன்படுத்துவது மற்றும் வீட்டை ஒப்படைக்கும் பொழுது சேதப்படுத்தி கொடுப்பது போன்ற அட்டகாசங்களை பெரும்பான்மையான இந்தியர்கள் செய்வதால், ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் இதில் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் 30க்கும் மேற்பட்ட வாடகை வீட்டு உரிமையாளர்கள், தனக்கு வீடு கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிருத்திருப்பது தன்னை பெரும் மன உளைச்சலுக்கு தள்ளியுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிலை மாற வேண்டுமானால், நாம் முதலில் நன்முறையில் மாற வேண்டும் என்று இந்திய சமுதாயத்தை நோக்கி அறிவுறுத்தியிருப்பதைக் காணொளியில் காணலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!