
துபாய் – ஜூன் 13 – இன்று அதிகாலையில் ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ( Ayatollah Ali Khamenei ) உயிருடன் இருப்பதாகவும், நிலைமை குறித்து அவருக்கு தொடர்ந்து விளக்கமளிக்கப்பட்டு வருவதாக ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. அணு விஞ்ஞானிகள் பெரேடவுன் அப்பாஸி-தவானி
( Fereydoun abbasi -Davani மற்றும் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி
( Mohammad Mehdi Tehranchi ) ஆகியோர் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசாங்கத்தின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியதோடு , தெஹ்ரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதைத் தடுக்க நீண்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. புரட்சி பாதுகாப்பு படையின் உயர்மட்டத் தலைவரான ஹொசைன் சலாமி (Hossein Salami ) கொல்லப்பட்டதாகவும், தெஹ்ரானில் உள்ள அந்தப் பிரிவின் தலைமையகம் தாக்கப்பட்டதாகவும் ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகர் தெஹ்ரானிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலில் பல குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. Natanz சிலுள்ள உள்ள நாட்டின் முக்கிய யுரேனிய செறிவூட்டல் வசதி உட்பட, வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரானிய ஊடகங்களுடன் நேரில் பார்த்த சாட்சிகளும் தெரிவித்தனர்.