
கோலாலம்பூர், மார்ச் 28 – நோன்பு பெருநாளை முன்னிட்டு மார்ச் 24 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலான சிறப்பு நடவடிக்கையின் முதல் நாளில் மொத்தம் 1,800 பஸ்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.
வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசிகளை பயன்படுத்தியது, பஸ்களில் இரண்டாவது ஓட்டுநர் இல்லாததும் கண்டறியப்பட்ட குற்றங்களில் அடங்கும் என சாலைப் போக்குவரத்துத்துத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பட்லி ரம்லி (Aedy Fadly Ramli) தெரிவித்தார். அந்த எண்ணிக்கையில், 398 பஸ்கள் ரகசிய அமலாக்க நடவடிக்கையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கை பீசி டோல் சாவடியில் ஹரி ராயா Aidilfitri சிறப்பு நடவடிக்கை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
அதே காலகட்டத்தில், JPJ பல்வேறு குற்றங்கள் சம்பந்தப்பட்ட 22,552 நோட்டீஸ்களை வெளியிட்டதோடு 97 வாகனங்களையும் பறிமுதல் செய்தது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 77,736 வாகனங்களை ஆய்வு செய்ததன் விளைவாக அந்த குற்றப் பதிவுகளுக்கான சம்மன் விநியோகிக்கப்பட்டதாக Aedy கூறினார். நோன்பு பெருநாளை முன்னிட்டு அப்பெருநாளுக்கு முன்னதாக மார்ச் 29 மற்றும் மார்ச் 30 ஆம் தேதியும் , நோன்பு பெருநாளுக்குப் பின் ஏப்ரல் 5 மற்றும் 6ஆம்தேதிகளிலும் சாலைகளில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு சாலை போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது.