Latestமலேசியா

கங்காரில் சொந்த பிள்ளையை சித்ரவதைச் செய்த பெற்றோர்; குற்றத்தை மறுத்த தம்பதி

கங்கார், ஜூன் 24 – அண்மையில் அராவ்விலுள்ள தங்களது வீட்டில் தங்களுடைய 11 வயது குழந்தையை உடல் ரீதியாக சித்ரவதை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட கணவனும் மனைவியும் இன்று நீதிமன்றத்தில் அக்குற்றத்தை மறுத்துள்ளனர்.

ஜூன் 18 ஆம் தேதியன்று அவ்விருவரும் இக்குற்றத்தை தங்களது சொந்த இல்லத்தில் செய்ததாக அறியப்படுகின்றது.

37 வயதுடைய குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது மனைவியும் குற்றத்தை மறுத்தத்தைத் தொடர்ந்து நீதிபதி அவ்விருவருக்கும் தலா 20,000 ரிங்கிட் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் தொகையை விதித்துள்ளார்.

இந்நிலையில் குற்றவாளியின் மனைவி மட்டுமே முழு ஜாமீன் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார் என்று அறியப்படுகின்றது.

இந்த வழக்கிற்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் சமர்ப்பிக்க நீதிமன்றம் இவ்வழக்கை ஜூலை 17 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!