Latestமலேசியா

கஞ்சா விநியோகக் கும்பல் முறியடிப்பு மூவர் கைது

சுங்கைப் பூலோ, ஜூன் 25 – சுங்கை பூலோ மற்றும் புக்கிட் புருந்தோங்கில் மூன்று ஆடவர்களை கைது செய்ததன் மூலம் கஞ்சா போதைப் பொருளை விநியோகித்துவந்த கும்பலை போலீசார் முறியடித்தனர். 28 முதல் 42 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் சுங்கை பூலோ மற்றும் உலு சிலாங்கூ வட்டாரத்தில் போதைப் பொருளை தீவிரமாக விநியோகித்து வந்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் superintendan முகமட் ஹபிஸ் முகமட் (Mohd Hafiz Muhammad) தெரிவித்தார்.

அந்த மூன்று ஆடவர்களில் ஒருவர் சுங்கை பூலோ, கம்போங் பாரு சுபாங்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் இதர இரண்டு நபர்கள் புக்கிட் புருந்தோங்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சந்தை மதிப்பு 30,000 ரிங்கிட் முதல் 40,000 ரிங்கிட்வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அண்டை நாட்டில் கூரியர் நிறுவனத்தின் மூலமாக இக்கும்பல் போதைப் பொருளை பெற்று வந்தததாகவும் அவை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கான சந்தைகளில் விநியோகிப்படுவதற்காக பெறப்பட்டாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் இம்மாதம் 26ஆம் தேதிவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு 1952ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!