Latestமலேசியா

காதார பணியாளர்களுக்கு ‘on-call’ அலவன்ஸ் உயர்வு அறிவிப்பு; பட்ஜெட்டை புகழும் லிங்கேஷ்வரன்

கோலாலம்பூர், அக்டோபர்-11,

சுகாதாரப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, அவர்கள் நீண்டநாள் காத்திருந்த ‘on-call allowance’ உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவிப்பதாக, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாச்சலம் கூறினார்.

ETAP எனப்படும் அந்த on-call அழைப்புப் பணிக்கான நிரந்தர அலவன்ஸ் தொகை சுமார் 40 சதவீதம் உயர்த்தப்படுகிறது — இதற்காக ஆண்டுக்கு கூடுதலாக RM120 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, விடுமுறை நாட்களில் பணியிலிருக்கும் சிறப்பு மருத்துவர்களின் அலவன்ஸ் RM250-லிருந்து RM350-தாக உயர்த்தப்படும்.

அதோடு, 4,500 ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிகளை நிரந்தரமாக்குவது, 935 நிரந்தர தாதிப் பணிகளை உருவாக்குவது, தனியார் மருத்துவர்களின் ஆலோசனை கட்டணமும் RM10–RM35-லிருந்து RM10–RM80 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள், சுகாதாரத் துறைக்கான மடானி அரசாங்கத்தின் உறுதியான கடப்பாட்டை வெளிப்படுத்துவதாக லிங்கேஷ் குறிப்பிட்டார்.

“இப்போது எல்லா மருத்தவர்களும் தாதியர்களும் புதிய உற்சாகத்துடன் மக்களுக்கு சேவை செய்யும் நேரம் வந்துவிட்டது” என அறிக்கை வாயிலாக அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!