
ஈப்போ, அக்டோபர் 31 –
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆடவரை குத்திக் கொன்று, பின்னர் அவரது உடலை காரில் எரித்து அழித்த குற்றச்சாட்டில் கைதான இரண்டு நண்பர்கள் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து, அவ்விருவருக்கும் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் கிடைக்கப்பெற்ற சாட்சியின் வாக்குமூலத்தின்படி, சம்பவ இடத்தில் கார் தீப்பிடித்து எரிவதை அவர் நேரில் கண்டதாகவும், பின்னர் இந்த இரு குற்றவாளிகளும் அந்தக் காரில் ஏறி சென்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட நபர் குத்துக்காயங்களால் இறந்தார் என்றும், அவரது உடலை அடையாளமின்றி எரித்ததாகவும் விசாரணைத் தகவல்கள் உறுதிப்படுத்தின.
இந்த இரு குற்றவாளிகளும் கடந்த 2018 ஆண்டு நவம்பர் 15 அன்று 21 வயது நிரம்பிய ‘ஹெங் வெய் யோங்’ என்பவரை குத்திக் கொன்று, உடலை காரில் எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



