
கும்பல் தலைவனும் காதலிகளும் கைது: RM200 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்
கோலாலம்பூர், பிப்ரவரி-7,
கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பினாங்கில் நடைபெற்ற தொடர் சோதனைகளில் 3 முக்கிய போதைப்பொருள் கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.
ஒரு கும்பல் தலைவனையும், அவனது இரு காதலிகள், மற்றும் மேலும் 9 பேரையும் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
ஜனவரி 30‑ஆம் தேதி கெந்திங் செம்பா R&R பகுதியில் 265 கிலோ மெத் உடன் மூவர் பிடிபட்டனர்.
அடுத்த நாள் கும்பல் தலைவனும் இரு பெண்களும் கைதுச் செய்யப்பட்டனர்.
பிப்ரவரி 2 மற்றும் 3‑ஆம் தேதிகளில் மேலும் 6 பேர் கைதாகினர்.
அவர்களில் KLIA‑வில் கஞ்சா கடத்த முயன்ற 2 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
சோதனைகளின் தொடர்ச்சியாக செராஸ், Taman Equine மற்றும் பினாங்கில் கூடுதலாக 155 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தமாக சுமார் 400 கிலோ _methamphetamine_ மற்றும் கஞ்சா வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மதிப்பு RM200 மில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உள்ளூர் மற்றும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் கூறியது.



