Latestமலேசியா

ஒன் உத்தாமா பேரங்காடி சொங்க்ரான் கொண்டாட்டத்தில் – காணொளி வைரல்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 21 — சமீபத்தில் சொங்க்ரான் கொண்டாட்டத்தின் போது, ஒன்  உத்தாமா வணிக மைய  வாகன நிறுத்துமிடத்தில்  நடந்த கைகலப்பு சம்பவ காணொளி ஒன்று வைரலானதை தொடர்ந்து, அது குறித்து போலிஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வைரலாகி வரும் இக்காணொளியில், நாற்காலிகளையும் ஆயுதங்களையும் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதை காண முடிகின்றது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான எந்தவித புகாரும் இன்னும் செய்யப்படவில்லை என்று பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷாருல்னிசாம் ஜாஃபர் தெரிவித்தார்.
இருந்தபோதும் டாமான்சாரா காவல் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!