Latestஉலகம்

கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் வீதிகளில் தஞ்சம்

பொகோத்தா, ஆகஸ்ட்-11-தென்னமரிக்க நாடான கொலம்பியாவில் ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில், இதுவரை குறைந்தது 132 பேர் பலியாகியுள்ளனர்.

அதே சமயம் 570 பேர் வரை காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 86 கட்டடங்கள் இடிந்து விழுந்து, 7 விமான நிலையங்களில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், தலைநகர் போகோத்தா (Bogota) உள்ளிட்ட பல பகுதிகள் குலுங்கி, உயரமான கட்டடங்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

​நகரம் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்ட நிலையில், மீட்புக் குழுவினர் மற்றும் அவசரகாலப் படையினர் உடனடியாகக் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்பதால் மரண எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

​நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் சேகரித்து வருகிறது.

மேலும், பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொலம்பியா முழுவதும் 5 நகரங்களுக்கு சிவப்புக் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!