
கோலாலம்பூர், மே 15 – Jalan Banting -KLIA சாலையில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளின் பின்புறம் லோரி மோதியதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பான காணொளி சமூக வலைத் தளத்தில் வைரலானது. அந்த மோட்டார் சைக்கிளோட்டியும் லோரியும் கே.எல்.ஐ,ஏ விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில் நேற்று நண்பகல் மணி 1.30 அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லோரியின் அடியில் சிக்கிக் கொண்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்.
40 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி கடுமையாக காயம் அடைந்ததைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அவர் இறந்தார். இச்சம்பவம் தெடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தொழிற்நுட்ப பரிசோதனைக்காக லோரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த லோரி ஓட்டுநர் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்துள்ளதோடு அவரது வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.