
ஜித்ரா, செப்டம்பர்-25,
கெடா, ஜித்ரா, சங்லாங் அருகே, ஓர் ஆடவர் ஓட்டிச் சென்ற Toyota Alphard கார் தடம்புரண்டு ஆற்றில் பாய்ந்ததில், தெய்வாதீனமாக அவர் உயிர் தப்பினர்.
நேற்று முன்தினம் இரவு 7 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அந்த Toyota Alphard வாகனம், எதிரே வந்த Proton Saga காருடன் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.
Saga ஓட்டுநர், திடீரென சாலையை கடந்த உடும்பைத் தவிர்க்க முயன்றபோது இந்த மோதல் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Alphard ஓட்டுநர் பொது மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அவருக்கு நெஞ்சு மற்றும் உடலில் வலி ஏற்பட்டது.
Saga முன்பகுதியில் சேதமடைந்தாலும் அதன் ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.