
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 20 – சிலாங்கூர் காவல் துறையினர், 2025 வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்க உள்ளனர்.
இன்று மற்றும் நாளை, மாநிலத்தின் அனைத்து மாவட்ட போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு (BSPTD) கவுன்டர்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சிலாங்கூர் போக்குவரத்துத்துறை (JSPT) தெரிவித்துள்ளது.
அனைத்து குற்றங்களும் தள்ளுபடிக்குரியவை அல்ல என்றும்
சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது வழங்கப்பட்ட அபராதங்களும் தள்ளுபடிக்குரியவை அல்ல என்றும் கூறியுள்ளனர்.
ஷா ஆலம், கிள்ளாங் Utara, கிள்ளாங் Selatan, KLIA, செபாங், குவாலா லங்காட், சுபாங் ஜெயா, குவாலா சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர், சாபக் பெர்னாம், கோம்பாக், அம்பாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா, செர்டாங், காஜாங் மற்றும் சுங்கை புலோ உள்ளிட்ட 16 இடங்களில் கவுண்டர்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.