
கேரளா, ஜூன் 23 – கேரளாவில், வீட்டு சமையலறையில், சிலிண்டரிலிருந்து அளவுக்கதிகமாக எரிவாயு கசிந்து வீடு முழுவதும் ‘கேஸ்’ பரவியதைத் தொடர்ந்து, திடீரென தீ விபத்து ஏற்பட்ட காணொளியைக் கண்ட வலைதளவாசிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்த பெண், கட்டுப்பாடற்ற எரிவாயு கசிவைப் பார்த்தவுடன் அலறி அடித்து கொண்டு ஓடுவதைக் காணொளியில் காண முடிந்தது.
சற்று நேரத்திற்கு பிறகு, 2 நபர்கள் வீட்டினுள் நுழைந்து, சிலிண்டரின் தலை பகுதியை மூடும் முயற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது திடீரென சமையலறையிலிருந்து பெரும் வெடிப்பு சத்தம் ஏற்பட்டு தீ பரவ தொடங்கியது.
வீட்டின் ஜன்னல்களும் கதவுகளும் திறந்த நிலையில் இருந்ததால், தீ மேற்கொண்டு பரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், காணொளியைப் பார்ப்பவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டுமென்று கருத்துரைத்து வருகின்றனர்.