Latestமலேசியா

செத்தியூவில் நீர் பெருக்கில் சிக்கிய நால்வரை தீயணைப்புப் படை மீட்டது

செத்தியூ, ஜூன்-18 – திரங்கானு, செத்தியூ, சுங்கை தோங் ஆற்றில் நேற்றிரவு ஏற்பட்ட நீர் பெருக்கில் ஒரு சிறுமி உள்ளிட்ட நால்வர் சிக்கிக் கொண்டனர்.

திடீரென ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதால் அவர்கள் ஆற்றின் அந்த பக்கமாக சிக்கிக் கொண்டனர்.

எனினும் பாதுகாப்பான இடத்தில் இருந்ததால் அவர்களுக்கு காயமேதும் ஏற்படவில்லை.

மாலை 6 மணிக்கு மேல் தகவல் கிடைத்து தீயணைப்பு மீட்புத் துறை சம்பவ இடம் சென்றடைந்தது.

கையிறு மற்றும் பாதுகாப்பு ஜேக்கெட்டுகளைக் கொண்டு அந்நால்வரையும் அக்கரையிலிருந்து அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!