
சைபர்ஜெயா, ஜூன் 27 – கடந்த செவ்வாய்க்கிழமை சைபர்ஜெயாவிலுள்ள தனியார் பல்கலைக்கழக மாணவவி ஒருவர் தனது தங்குமிடத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று சந்தேக நபர்களுக்கு இன்று முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 19 முதல் 20 வயதுக்குட்பட்ட ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர் என்று சிப்பாங் காவல்துறைத் தலைவர், நோர்ஹிசாம் பஹாமன் தெரிவித்துள்ளார். .
சந்தேக நபர்கள் ஜோகூர் பாரு, நெகிரி செம்பிலான், கெமென்சே ஆகிய இடங்களில் நேற்று காலை 9 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை ஒவொருவராக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதோடு தகவல் அறிந்த போதும்மக்கள் காவல்துறையினரை உடனடியாக தொடர்புக்கு கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகின்றன.