Latestமலேசியா

ஜப்பானில் ‘குப்பை’ வீட்டிலிருந்து 100 பூனைகளின் சடலங்கள் மீட்பு

தோக்யோ, ஜூன்-5 – ஜப்பானில் குப்பைக் கூளங்கள் நிறைந்த ஒரு பெண்ணின் வீட்டிலிருந்து 100 பூனைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பூனையின் பாதி உடலில் தோல் உரிந்து, அடையாளம் தெரியாத அளவுக்கு மோசமான நிலையில் மீட்கப்பட்டது.

சரியாகப் பராமரிக்கப்படாத காரணத்தால் ஏராளமான பூனைகள் சிறுநீர் மற்றும் மலக்கழிவுகளுக்கு மத்தியில் செத்துகிடந்தன.

விலங்குகள் நல சங்கமொன்றின் உறுப்பினரான அம்மாது, சங்கத்திற்குத் தெரியாமலேயே தன்னிச்சையாக ஏராளமான பூனைகளை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் பூனைகளை வளர்க்கும் ‘இலட்சணம்’ வெளிச்சத்துக்கு வந்திருப்பதால், இனியும் பூனைகளை எடுத்துச் செல்ல அப்பெண் அனுமதிக்கப்பட மாட்டார் என அச்சங்கம் அறிவித்துள்ளது.

அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது உறுதியாகத் தெரிவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!