Latestஉலகம்

தலைநகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட உகாண்டா நாட்டு பெண்கள் 7 பேர் கைது

கோலாலம்பூர், மே-25 – தலைநகர் Jalan Nagasari மற்றும் Jalan Changkat-டில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 7 ஆப்பிரிக்கப் பெண்கள் நேற்றிரவு கைதுச் செய்யப்பட்டனர்.

KL Strike Force, குடிநுழைவுத் துறை மற்றும் DBKL இணைந்து மேற்கொண்ட Ops Noda சோதனையில், 25 முதல் 42 வயதிலான அந்த உகாண்டா நாட்டு பெண்கள் சிக்கினர்.

ஆணுறைகள், டிஷு பெட்டிகள், 450 ரிங்கிட் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

அப்பகுதியில் நடந்துசெல்லும் வெளிநாட்டவர்களைக் குறி வைத்து அவர்களில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா தெரிவித்தார்.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 150 முதல் 200 ரிங்கிட் வரையில் அவர்கள் கட்டணம் விதிப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

கைதான எழுவரும் மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!