
ஜோகூர் பாரு – ஜூன்-15 – தன்னைப் போல தோற்றமளிக்கும் ஒருவர் ‘Datok Abdul Malik’ என்ற நபரிடமிருந்து நிதியுதவி பெற்றதாகக் கூறி டிக் டோக்கில் வைரலாகி வரும் வீடியோ போலியானது என,
ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அது முழுக்க முழுக்க AI அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ; தன் மீது போடப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு அதுவாகும் என குமார் அறிக்கையொன்றில் கூறினார். இதையடுத்து அந்த போலி வீடியோ குறித்து ஜோகூர் போலீஸின் ஊடக பிரிவு போலீசில் புகாரளித்துள்ளது.
இவ்விவகாரம் குற்றவியல் சட்டத்தின் கீழும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழும் விசாரிக்கப்படுகிறது.
AI போன்ற தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்தி மோசடி செய்வதையும் அவதூறு பரப்புவதையும் தமது தரப்புக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய டத்தோ குமார், இந்த செயல்கள் எந்தவொரு தனிநபர் அல்லது அதிகாரத் தரப்பின் நற்பெயரை பாதிக்கும் ஆபத்துள்ளவை என்றார்.