
கியெஃவ், ஜூன்-3 – 3 ஆண்டு கால போரில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யாவுக்குள் புகுந்து யுக்ரேய்ன் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதலே, தற்போது பேச்சுப் பொருளாகியுள்ளது.
யுக்ரேனிலிருந்து 4,300 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ரஷ்யாவின் 4 விமானப் படைத் தளங்களைக் குறி வைத்து அத்தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் ரஷ்ய விமானப் படைக்குச் சொந்தமான 40 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவை மிகவும் விலை உயர்ந்த போர் விமானங்கள் என்பதால், ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சேதமாகக் கருதப்படுகிறது.
யுக்ரேய்னின் இந்த ட்ரோன் தாக்குதல் கவனமாக திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதானது ரஷ்யாவை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளையும் மிரளச் செய்துள்ளது.
இங்குதான் யுக்ரேய்ன் தாக்குதலின் துணிச்சல் வெளிப்பட்டது; அதாவது எல்லையிலிருந்து எல்லா வழிகளிலும் ட்ரோன்களை பறக்கவிட முயற்சிப்பதற்குப் பதிலாக, யுக்ரேய்ன் தான் குறிவைக்க விரும்பிய தளங்களுக்கு அருகிலேயே அவற்றைக் கடத்தி, அங்கிருந்து ஏவியது.
CNN துப்புக் துலக்கியதில் அத்தாக்குதல்களில் மொத்தமாக 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
செயல்பாட்டாளர்களால் ரஷ்யாவுக்குள் கடத்தப்பட்ட இந்த ட்ரோன்கள், பின்னர் நடமாடும் மரக் கொட்டகைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டன.
இந்த மர கேபின்கள் பின்னர் லாரிகளில் வைக்கப்பட்டு விமானப் படைத் தளங்களுக்கு அருகிலுள்ள இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இத்தனை நடந்தும், ரஷ்யா அதனை எப்படி கோட்டை விட்டது என்பதே ஆச்சரியமாக உள்ளது; யுக்ரேய்னின் யுக்தியை அது எதிர்பார்க்கவில்லையா? அல்லது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா என்பதும் கேள்வியாக உள்ளது.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக திட்டமிட்டுள்ள நடத்தப்பட்ட அத்தாக்குதல் அற்புதான அடைவுநிலை என யுக்ரேய்ன் அதிபர் வொளாடிமிர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யா என்ற மாபெரும் எதிரியின் இடத்திற்குள்ளே ஊடுருவி அதன் போர் விமானங்களை யுக்ரேய்ன் தகர்த்திருப்பது, அதன் இராணுவ யுக்தியை நிரூபித்துள்ளது.
இதுநாள் வரை யுக்ரேய்னை ரஷ்யா குறைத்து மதிப்பிட்டிருக்கலாம்; ஆனால், வரும் காலங்களில் அது முடியாது என்பதற்கு இதுவே சான்று.