
கோலாலம்பூர், மே 20 – 2025/2026 அமர்வுக்கான கல்வி அமைச்சின் மெட்ரிகுலேஷன் கல்வி திட்டத்திற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல் தெரிந்துகொள்ளலாம் . விண்ணப்பம் செய்த மாணவர்கள் https://matrikulasi.moe.gov.my என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம் என்று கல்வி அமைச்சு
இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மெட்ரிகுலேசன் விண்ணப்பத்தில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு, மேல்முறையீட்டு விண்ணப்பங்களை நாளை முதல் ஜூன் 21 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். மெட்ரிகுலேஷன் திட்டம் தொடர்பான விளக்கங்கள் பெறுவதற்கான முகப்பிட சேவை நாளை முதல் அடுத்த வெள்ளிக்கிழமை வரை புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தின் E வளாகத்தின் Block E15 தொகுதியில் வேலை தினத்தின் அலுவலக நேரத்தில் மட்டுமே திறந்திருக்கும் .