
கோலாலம்பூர், மே-28 – கோலாலம்பூர் கூச்சாய் லாமா மற்றும் பண்டார் ஸ்ரீ பெட்டாலிங்கில் சிகையலங்கார கடை என்ற போர்வையில் விபச்சாரம் நடத்தி வந்த 2 கடைகளின் குட்டு அம்பலமானது.
2 வாரங்களாக உளவுப் பார்த்த பிறகு, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு புத்ராஜெயா குடிநுழைவுத் துறையைச் சேர்ந்த 38 அதிகாரிகள் அங்கு சோதனைக்குச் சென்றனர்.
அப்போது வெளிநாட்டுப் பெண்களான விலைமாதர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் வாடிக்கையாளர்களை ‘கவனித்துக்’ கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வியட்நாம், இந்தோனேசியா, வங்காளதேசம், லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 ஆண்களும் 45 பெண்களும் பல்வேறு குற்றங்களுக்காகக் கைதுச் செய்யப்பட்டனர்.
போலீஸின் கண்களின் படாமல் அவர்களை பாதுகாத்து வந்ததாக நம்பப்படும் 3 உள்ளூர் ஆடவர்களும் கைதாகினர்.
WeChat செயலி வாயிலாக விலைமாதர் சேவைக்கு வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம்.
ஒருவருக்கு 150 முதல் 250 ரிங்கிட் வரையில் கட்டணம் விதிக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 1,500 ரிங்கிட் வரையில் இலாபம் கொட்டுவதும் விசாரணையில் தெரிய வந்ததாக, குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சக்காரியா ஷாபான் கூறினார்.
மேற்கொண்டு விசாரிக்க ஏதுவாக, கைதான அனைவரும் புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.