Latestமலேசியா

தேசியப் பயிற்சி வாரத்தை முதன் முறையாக ஆசியான் நாட்டவர்களுக்கு திறக்கும் மலேசியா; ஸ்டீவன் சிம் தகவல்

கோலாலாம்பூர், மே-28 – மலேசியா தனது முதன்மை திறன் மேம்பாட்டு முன்னெடுப்பான NTW எனப்படும் தேசிய பயிற்சி வாரத்தை, முதன் முறையாக அனைத்து ஆசியான் நாட்டவர்களுக்கும் திறக்கவிருக்கிறது.

இதன் வழி வரும் ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நேரிலும் இயங்கலை வாயிலாகவும் 65,000-க்கும் மேற்பட்ட பயிற்சிகளில் அவர்கள் இலவசமாக பங்கேற்கலாம்.

மலேசியா, 2025 ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதை ஒட்டி மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அவ்வறிவிப்பை வெளியிட்டார்.

ஆசியான் மனித மூலதன மேம்பாட்டுக்கான முதலீட்டு கருத்துரங்கில் பேசிய போது அவர் அதனைத் தெரிவித்தார்.

AI அதிநவீன தொழில்நுட்பம், இலக்கவியல் உருமாற்றம், பசுமைத் தொழில்நுட்பம், தலைமைத்துவம், மென் திறன்கள் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும்.

Microsoft, Udemy, Awantec, Alibaba Cloud போன்ற உலக பெருநிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இப்பயிற்சிகள் வழங்கப்படுவதாக ஸ்டீவன் சொன்னார்.

இந்த 2025 NTW பயிற்சி வாரம், மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD-யின் ஆதரவோடு நடைபெறுகிறது.

இவ்வட்டாரத்திலிருந்து 5 மில்லியன் பங்கேற்பாளர்களை இது ஈர்க்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!