Latestமலேசியா

கினாபாலு மலையிலிருந்து இறங்கும் போது பிரிட்டிஷ் மலையேறி மரணம்

ரானாவ், பிப்ரவரி-26 – சபாவில், நேற்று காலை கினாபாலு மலை உச்சியிலிருந்து இறங்கி வரும் போது 70 வயது பிரிட்டிஷ் மலையேறி மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

அம்முதியவர் பேச்சு மூச்சின்றி கிடந்ததை அடுத்து உடனிருந்தோர் அவசர உதவிக் கோரினர்.

சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புக் குழுவும் மருத்துவக் குழுவும் அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து கீழே தூக்கிக் கொண்டு வந்தது.

எனினும் அடிவாரத்தை அடையும் முன்பே அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.

சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!