Latestமலேசியா

நாட்டை விட்டு வெளியேற முயற்சி; 25 வெளிநாட்டவர்கள் கைது – AKPS

சிப்பாங், மே 21 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA), நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுப்பட்ட 25 வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS மேற்கொண்ட திடீர் பரிசோதனையில், வியட்நாம், கம்போடியா, இந்தியா மற்றும் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த இவர்கள், மலேசிய நாட்டில் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறியும் இங்கே தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், அவ்வெளிநாட்டவர்களை சட்டவிரோத முறையில் நாட்டை விட்டு வெளியேற்ற உதவிய 4 குடிவரவுத்துறை அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டு வருவதோடு, நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் AKPS தெரிவித்துள்ளது.

இந்நிலையில், AKPS தமது கண்காணிப்பு முயற்சிகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்துவதோடு நாட்டின் நுழைவாயில்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!