Latestமலேசியா

நெடுஞ்சாலையில் 5 முறை வாகனம் கவிழ்ந்த சம்பவம்; ‘டாஷ்காம்மில்’ பதிவான காணொளி வைரல்

கோலாலம்பூர், ஜூன் 10 – பேராக் ஸ்லிம் ரிவர்-சுங்காய் அருகேயுள்ள பிளஸ் நெடுஞ்சாலையில் (Plus), பெண் ஒருவரின் ‘பெரோடுவா பெஸ்ஸா’ வாகனம் 5 முறை கவிழ்ந்து, விபத்துக்குள்ளான சம்பவம், அந்த பெண்ணின் ‘டாஷ்க்காமில்’ பதிவாகி, அக்காணொளி வளைத்தளத்தில் வைரலாகி வந்த நிலையில், நெட்டிசன்களிடமிருந்து அனுதாபத்தையும் விமர்சனத்தையும் பெற்று வருகின்றது.

இந்த விபத்தில், கவிழ்ந்த வாகனத்திலிருந்த பெண்ணுக்கு மட்டுமே சிறு காயங்கள் ஏற்பட்டதென்றும், டொயோட்டா வியோஸில் பயணித்தவர்கள் காயங்களின்றி தப்பித்ததாகவும் அப்பெண் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கோர விபத்தில், பெஸ்ஸாவிலிருந்து இருந்த ஏர்பேக்குகள் விரிவடையவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், காணொளியைப் பார்த்த வலைதளவாசிகள், வேக கட்டுப்பாட்டின்மையே அந்த கொடூர விபத்திற்கு காரணம் என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர், சாலையில் எப்போதுமே கவனம் அவசியம் என்ற கருத்தினை பதிவிட்டு அப்பெண்ணுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!