
கோலாலம்பூர், ஜூன்-5 – கோலாலம்பூர் பங்சாரில் கட்டுமானத் தளமொன்றில் நேற்று கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலத்தை அடையாளம் காண, DNA மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைவர் கூ மஷாரிமான் கூ மஹ்மூட் அதனைத் தெரிவித்தார்.
இன்னமும் கட்டுமானத்தில் உள்ள மின்தூக்கி செல்லும் பாதையில் வெள்ளமேறிய நிலையில், சடலம் அதில் சிக்கிக் கொண்டுள்ளது.
வெளியே எடுப்பதற்கு அது சற்று சிரமமான இடமாகும் என்றார் அவர்.
சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், அது அப்பகுதியில் மே 27-ஆம் தேதி காணாமல் போன 25 வயது பிரிட்டன் இளைஞர் Jordan Michael John Johnson-Doyle-னுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
கடைசியாகக் காணப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்தில் Jordan-னைத் தேடுவதற்காக 30 போலீஸ்காரர்கள் களமிறங்கிய போது, அச்சடலம் கண்டெடுக்கப்பட்டது.