
கோத்தா பாரு, மே 29 – கடந்த ஜனவரி மாதம், கிளந்தான், கோத்தா பாரு, படாங் ஸ்ரீ படுகாவில், படிவம் மூன்று மாணவியை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும், உணவக உதவியாளர் இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளான்.
அவ்வாடவன், நீதிமன்றத்தில் தமக்கெதிரான குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், நீதிமன்றம் அவனுக்கு 8,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை விதித்து, அவ்வழக்கின் மறு விசாரணையை, ஜூன் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பாலியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டுள்ள அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படியும் விதிக்கப்படும்.