
பாகிஸ்தான், ஜூன் 4- கடந்த செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மலிர் சிறையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சிறையில் சுவர்களும் கதவுகளும் உடைந்து விழுந்ததைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பாகிஸ்தான் காவல்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிறையிலிருந்து தப்பியவர்களில், 80 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில் இன்னும் 130க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நடவடிக்கையில் கைதி ஒருவன் கொல்லப்பட்டதும், சிறை அதிகாரிகள் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலையில் பாதுகாப்பு குழுக்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பதாகவும், கைதிகளின் குடும்பத்தார் போராட்டம் நடத்தி வருவதாகவும் போலீசார் அறிவித்துள்ளனர்