Latestமலேசியா

பாதுகாப்பு நடவடிக்கை இல்லாமல் காரை ஏற்றிச் செல்லும் லோரியின் காணொளி வைரல்

கோலாலம்பூர், ஜூன் 4 – சரியான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் லோரியில் கார் ஏற்றிச் செல்லப்படுவதைக் காட்டும் காணொளி வைரலாகி வருகிறது. இது சாலை பாதுகாப்பு அமலாக்கங்கள் குறித்து நெட்டிசன்களிடமிருந்து கவலையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. @firdodidoz என்ற பயனரால் பதிவேற்றப்பட்ட 27 வினாடிகள் கொண்ட டிக்டோக் கிளிப்பில், பதிவு எண் இல்லாத லோரி, அதன் டிரெய்லரில் ஒரு காரை இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது. அந்தக் காட்சிகளுடன், இப்போது காலம் விசித்திரமாக இருக்கிறது, என் கண்கள் தந்திரமாக விளையாடுகிறதா, அல்லது லோரிதான் தவறாக இருக்கிறதா? என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. கார் பாதுகாப்பற்றதாகத் தோன்றியது, எந்தத் தடைகளோ அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளோ இல்லை.

இந்த வீடியோ ஆன்லைனில் விவாதத்தைத் தூண்டியுள்ளது, இதுபோன்ற வாகனத்தை எவ்வாறு சாலையில் அனுமதிக்க முடியும் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். @Asniza என்ற ஒரு பயனர், அமலாக்கத்தின் பலவீனம் குறித்து கேள்வி எழுப்பினார்.
நீங்கள் தேவைப்படும்போது எங்கே இருக்கிறிர்கள் என சாலப் போக்குவரத்துத்துறையை அவர் வினவினார். மற்றவர்கள் அந்தக் காட்சியின் அபத்தம் குறித்து கிண்டலாக பதில்களை பதிவிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!