
புத்ராஜெயா, மே 29 – பெர்சாத்து கட்சி மீண்டும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசுடன் சேரப் போகிறது என்ற தகவலை அக்கட்சி மறுத்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் முகமட் அஸ்மீன் அலி (Mohamed Azmin Ali) கூறுகையில், இது பொய்யான வதந்தி என்றும், பெர்சாத்டு மற்றும் Perikatan Nasional கூட்டணியில் பிளவு ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெர்சாத்து தலைவர்கள் மற்றும் PKR இடையே எந்த ரகசிய பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.
பெர்சாத்து தொடர்ந்து PN கூட்டணியுடனேயே இருக்கும் என்றும், கட்சியின் நிலைப்பாடு மாறவில்லை என்றும் அஸ்மின் அலி உறுதியாக தெரிவித்தார்.



