
ஜார்ஜ் டவுன், மே 13 – ஜார்ஜ் டவுனில், கடந்த ஆண்டு பினாங்கு மாநில ஊராட்சி மன்றமான MBPP அமல்படுத்திய, புறாக்களுக்கு உணவளிக்கும் தடையை மீறியதற்காக ஏழு நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
MBPP-யின் தடை அமலாக்கத்திற்கு பிறகும், புறாக்களுக்கு உணவளிப்பது தொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கின்றன என்று MBPP கவுன்சில் உறுப்பினரும் சுற்றுச்சூழல் சுகாதார துணைக்குழுத் தலைவருமான லீ செங் ஹ்வாய் (Lee Seng Hwai) தெரிவித்துள்ளார்.
மேலும், புறாக்களின் ஆபத்துகள், குறிப்பாக அவற்றின் கழிவுகள், ஆரோக்கியத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சம்மன்களை வழங்குவதற்கு முன் MBPP மென்மையான நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பெரும்பாலானவர்கள் புறாக்களுக்கு உணவளிப்பதற்கான தடை பற்றி அறிந்திருந்தபோதும், இத்தகைய நடவடிக்கையை தொடர்ந்து செய்வது கண்டிக்கத்தக்க ஒன்று என்றும் குறிப்பிட்டிருந்தார்.