Latestஉலகம்

போர் நிறுத்த இணக்கம் குறித்து ட்ரம்ப் அறிவித்த கொஞ்ச நேரத்தில் கட்டாரில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய 6 ஏவுகணைத் தாக்குதல்

டோஹா, ஜூன்-24- கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறி வைத்து ஈரான் 6 ஏவுகணை குண்டுகளை வீசி தாக்கியுள்ளது.

தனது 3 அணு சக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு பதிலடி தருவோம் என எச்சரித்த 24 மணி நேரங்களில் ஈரான் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

கட்டார் தலைநகர் டோஹா முழுவதும் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதால் பொது மக்கள் பீதியடைந்தனர்.

இதையடுத்து ஆக உயர்மட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலும் – ஈரானும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் கண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில் ஈரான் தனது பலத்தைக் காட்டியுள்ளது.

இதற்கு வாஷிங்டன் ஆற்றப்போகும் எதிர்வினை குறித்து மத்தியக் கிழக்கில் பெரும் கவலை எழுந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!