Latestமலேசியா

போலி முதலீட்டு மோசடி; 36 சீன நாட்டவர்கள் போர்ட் டிக்சன் நீதிமன்றத்தில் ஆஜர்

போர்ட்டிக்சன், செப்டம்பர் 2 – போலி முதலீட்டு சலுகைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 36 சீன நாட்டவர்கள் நேற்று போர்ட்டிக்சன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 21 முதல் 44 வயதுக்குட்பட்ட 31 ஆண்களும், ஐந்து பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சீன குடிமக்களை குறிவைத்து, போலி முதலீட்டு சலுகைகளை வழங்கி அவர்களை ஏமாற்றும் நோக்கில் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!