Latestமலேசியா

போலி RM100 நோட்டுகள்; ஏமாற்றிய நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

தம்பின், ஜூன் 24 – நேற்று தம்பின் நகரிலிருக்கும் இரண்டு உணவகங்களில் போலி 100 ரிங்கிட் நோட்டை கொடுத்து உணவு வாங்கி சென்ற இரண்டு சந்தேக நபர்களைப் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்று தம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர், அமிருதியன் சரிமான் கூறியுள்ளார்.

வங்கிக்கு போலி நோட்டுகள் கிடைத்ததாக காவல் துறையினருக்கு வந்த இரண்டு புகாரில், இரண்டு நோட்டுகளுமே வெவ்வேறு உணவுக் கடை வியாபாரிகளால் வங்கியில் செலுத்தப்பட்டவை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரண்டு வெவ்வேறு நபர்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு, குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொதுமக்கள் காவல்துறையினரை உடனடியாக அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!