Latestமலேசியா

மயக்கமடைந்த துணை விமானி; 10 நிமிடங்களுக்கு விமானியில்லாமல் பறந்த Lufthansa விமானம்; அறிக்கையில் அம்பலம்

ஃபிராங்ஃபர்ட், மே-20 – கடந்தாண்டு 205 பயணிகளை ஏற்றிச் சென்ற Lufthansa விமானமொன்று, நடுவானில் 10 நிமிடங்களுக்கு விமானியில்லாமல் பயணித்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது.

2024 பிப்ரவரி 17-ஆம் நடந்த அச்சம்பவத்தின் போது, ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட்டில் இருந்து ஸ்பெயினின் செவிலா நகருக்கு அந்த A321 விமானம் பறந்துகொண்டிருந்தது.

அதில் 199 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்தனர்.

விமானத்தின் கேப்டன் கழிவறைக்குச் சென்ற நேரத்தில் cockpit எனப்படும் விமானி அறையில் தனியாளாக இருந்த துணை விமானி திடீரென மயக்கம் போட்டதாக, ஸ்பெயின் விபத்து விசாரணை ஆணைத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்றாலும் autopilot எனப்படும் தானியங்கி விமானி இயக்கத்தில் இருந்ததால், விமானம் நிலையான முறையில் தொடர்ந்து பறந்தது.

இருப்பினும் துணை விமானி தற்செயலாக கட்டுப்பாடுகளை இயக்கினார் என்று அவ்வறிக்கை கூறியது.

அப்போது, துணை விமானி ‘திடீர் மற்றும் கடுமையான இயலாமையுடன்’ இருந்திருப்பது, குரல் பதிவுக் கருவியில் பதிவான குரல் வழி தெரிய வந்துள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் 3 முறை துணை விமானியைத் தொடர்புகொள்ள முயன்றார், ஆனால் எந்த பதிலும் இல்லை.

கேப்டன் கழிவறையிலிருந்து திரும்பி வந்து வழக்கமான திறப்பு குறியீட்டைக் கொண்டு விமானி அறை கதவைத் திறக்க முயன்றார்.

5 முறை முயற்சித்தும் முடியவில்லை; தவிர விமானி அறையின் பணியாளர் ஒருவர் இன்டர்காம் அழைப்பையும் செய்தார்; எந்த பதிலும் இல்லாததால், கேப்டன் கடைசியில் அவசரகால குறியீட்டைப் பயன்படுத்தி விமானி அறையினுள் நுழைந்து விமானத்தைக் கட்டுப்படுத்தினார்.

அதே சமயம், மயங்கிகிடந்த துணை விமானிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு அவர் சுயநினைவடைந்தார்.

எனினும் அவரின் முந்தைய மருத்துச் சான்றிதழ் இரத்துச் செய்யப்பட்டது.

நடுவானில் இது வழக்கத்திற்கு மாறான ஒரு சம்பவம் என வருணித்த விசாரணைக் குழு, சக விமானி திடீர் ‘இயலாமைக்குச்’ சென்றால் எப்படி செயல்பட வேண்டுமென்பது விமானங்களின் கேப்டன்களுக்கு பயிற்சியளிக்கப்படுடவதாகக் கூறியது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!