Latestமலேசியா

மலாக்கா ஆற்றில் உடும்பை வேட்டையாடிய முதலை; அச்சத்தில் மக்கள்

மலாக்கா, அக்டோபர்-8, உணவு வளங்கள் தீர்ந்ததால் பெரும் பசியிலிருந்ததாக நம்பப்படும் ஒரு முதலை, மலாக்கா ஆற்றில் உடும்பை வேட்டியாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்த போது, அங்கு வந்திருந்த பொது மக்களும் குடியிருப்பாளர்களும் அக்காட்சியைக் கண்டு அதிர்ந்துபோயினர்.

Kampung Morten அருகேயுள்ள பாதசாரி நடைபாதையிலிருந்து எடுக்கப்பட்ட 1 நிமிட வீடியோ வைரலாகியுள்ளது.

அதில் 3 மீட்டர் நீளமுள்ள முதலை ஆக்ரோஷமாக உடும்பை தாக்குவது தெரிகிறது.

முதலையின் நடமாட்டம் குறித்து கவலைத் தெரிவித்த கிராம மக்கள், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினர்.

இன்று உடும்பு இரையானது; நாளை மனிதவர்கள் இரையாக மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என சிலர் கேள்வி எழுப்பினர்.

இவ்வேளையில், செய்தி கேள்விப்பட்ட வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காங்கள் துறையான PERHILITAN, அங்கு கண்காணிப்பை நடத்துவதாகக் கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!